பிகார் இடைத் தேர்தல்: 42% வாக்குப்பதிவு
First Published : 16 Sep 2009 11:24:00 PM IST
Last Updated :
பாட்னா, செப். 15: பிகாரில் இரண்டாம் கட்டமாக 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில் 42 சதவீத வாக்குகள் பதிவாகின. இத் தகவலை மாநில துணை தலைமைத் தேர்தல் அதிகாரி குமார் அன்சுமாலி தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6 வாக்குச் சாவடிகளில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார் ஏதும் இல்லை என்றார் அவர். வன்முறை இல்லாமல் வாக்குப்பதிவு முழு அமைதியாக நடந்தது என்று தலைமை நிலைய கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் நீல்மணி கூறினார். வாக்குப்பதிவு நடைபெற்ற 2620 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப் பதிவு நடைபெற்ற 11 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 7 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தனித்து 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.